districts

அயலி இணையத் தொடரால் தமிழகத்தில் இருப்பை வலுப்படுத்திய ஜீ 5 தமிழ்

சென்னை, மார்ச் 16- சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் தொடர்பான இணைய தொடர்களுக்குத் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுவதாக ஜீ 5 இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி மனிஷ் கல்ரா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண் கல்வி உரிமை குறித்த  அயலி மற்றும் விலங்கு. பேப்பர் ராக்கெட் போன்ற இணையத் தொடர்களுக்கு தமிழக  நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள தாகக் கூறினார். இதன் காரணமாக ஜீ 5 தளத்தைக் காண்போர் எண்ணிக்கை 54 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் கடந்த ஓராண்டில் தமிழக சந்தையில் தீவிரமாகச் செயல்படும் தளமாக ஜீ 5 மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். நாள்தோறும் தமிழ் உள்ளடக்கத்தைக் காண்போர் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு அதாவது 23 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றார். தமிழக பொழுதுபோக்குத்துறையில் கடந்தாண்டு நுழைந்த ஜீ 5 இந்த துறையில் சிறந்த கலைஞர்களைக் கொண்டு ஒரிஜினல் இணையத்தொடர்களைத் தயாரித்து தமிழ் மக்களிடம் மிகவும் நெருக்கமான தளமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். அயலி இணையத்தொடர் தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறந்த உள்ளடக்கம். சிறந்த படைப்பு களுடன் தமிழ் ஓடிடிதளத்தில் நம்பிக்கை யுடன் இறங்கியதற்கு நல்ல  பலன் கிடைத்துள்ளது என்று ஜீ5 தெற்கு  மண்டல தலைமை தொகுப்பு அதிகாரி சிஜி பிரபாகரன் கூறினார்.