விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூலம் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டி.சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, வட்டார போக்குவரத்து அலுவலர் பா.ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.