சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மோகன்ராஜ் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.