சென்னை, மார்ச் 26- போதைக்கு எதிராக சிலம்பம் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் நடத்தும் தமிழகம் முழு வதுமான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த் சிலம்ப கலைக்கூடம் மற்றும் வாலிபர் சங்கம் ராயபுரம் பகுதி குழு சார்பில் 200 மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம் சுற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிறன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதில் பேராசிரியர் இரா.காளீஸ்வரன், சிலம்பம் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் உ.விஜயன், டிசம்பர் 3 இயக்க த்தின் மாநிலத் தலைவர் டி.எம்.என்.தீபக், வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் எல்.பி.சரவணதமிழன், தலைவர். ஜி.நித்தியராஜ், பொருளாளர் அ.விஜய், மாநிலக் குழு உறுப்பினர் தமிழ்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், பகுதி தலைவர் தீபா, செயலாளர் நீதி தேவன், பொருளாளர் அழகுபாண்டி ஆகி யோர் ஆகியோர் பேசினர்.