districts

img

கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கடலூர்,ஜூன் 3- மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணி களுக்கு அண்ணா விளை யாட்டு அரங்கில் பரிசு அளிப்பு நிகழ்ச்சி  நடை பெற்றது. சி.பி.செல்வராஜ் கூடைப் பந்து அகாடமி மற்றும் யுனைடெட் கூடைப்பந்து கழகம் இணைந்து மாநில அளவிலான 2ஆம் ஆண்டு கூடை பந்தாட்ட போட்டி நடைபெற்றது. மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இரண்டு நாள் நடைபெற்ற இந்த போட்டி யில் தமிழகத்திலிருந்து சென்னை, கடலூர், திருச்சி, திண்டுக்கல், சேலம், மயிலாடுதுறை, விழுப்புரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 36 அணிகள் பங்கேற்றன.  இறுதிப்போட்டியில் திமுக மாநகர செயலாளர் கே. எஸ்.ராஜா தொடங்கி  வைத்து பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கூடை  பந்தாட்ட வீரர் ராபின்சன்  கலந்து கொண்டார். போட்டியின் ஒருங்கிணைப் பாளர் சி.பி செல்வராஜ், முன்னாள் இந்திய அணியின்  வீரர் தங்கதுரை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். யுனைடெட் பேஸ்கட் பால் கிளப்பின் தலைவர் பாலாஜி நன்றி கூறினார். இந்த போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடத்தை பெற்றது. 2ஆவது  இடத்தை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் 3ஆவது  இடத்தை  சென்னை ஜேப்பியார்  யூனிவர்சிட்டி அணியும், 4ஆவது இடத்தை சென்னை  ஜிசிபி கிளப் அணியும் வெற்றி பெற்றது.