சென்னை, மார்ச் 13- மின்சக்தி சேமிப்பிற்கான விருதை மத்திய மின் துறையிடமிருந்து ஐசிஎப் பெற்றுள்ளது. சென்னை ஐசிஎப், மின்சக்தி சேமிப்பு மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகளை நிறுவியமைக்காக மஒன்றிய மின் துறை யிடமிருந்து 2016-2019ஆம் ஆண்டுக்கான ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளில் சிறந்த நிறுவன விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் அண்மையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய மின்சக்தி மற்றும் மீள்எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஐசிஎப் முதன்மை மின் பொறி யாளர் தேவி பிரசாத் தாசுக்கு வழங்கினார். ஐசிஎப் தூய்மை எரிபொருள் உபயோகம் மற்றும் பசுமை மின்சக்தி உற்பத்தியின் மூலம் மின்சக்தி சேமிப்பு செய்து மத்திய மின்திறன் மேம்பாட்டு நிறு வனத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 41 விழுக்காடு மின் சேமிப்பினை எட்டி இந்த விருதைப் பெற்றுள்ளது. ஐசிஎப் தனது தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கான மின் தேவையை திருநெல்வேலி மாவட்டத் தில் ஐசிஎப் சொந்தமாக நிறுவியுள்ள 10.5 மெகாவாட் காற்றாலை மற்றும் ஐசிஎப் தொழிற்சாலை உள்பட்ட ஐசிஎப் வளாக கட்டிடங்களில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி அமைப்புகளின் மூலமாகவே தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.