திருமண ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி ஆவடியை சேர்ந்த பெண் கைது
அம்பத்தூர், பிப். 9- அம்பத்தூர் ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கோபிராஜன் (33). இவர் சமையல் கலை பட்டப்படிப்பு முடித்து, சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமண வயது எட்டி விட்டதால், பெற்றோர் பெண் பார்த்து வந்த போதிலும், அவருக்கு மணப்பெண் அமையவில்லை. இதையடுத்து, பெற்றோர் அறிவுரைப்படி ஒரு நாளிதழில் மணப்பந்தல் பக்கத்தில் சிவாஸ்ரீ என்ற பெயரில் பெற்றோர் இல்லாத மணமகள் என குறிப்பிட்டு இருந்ததை பார்த்து, அதில் இருந்த கைப்பேசி எண்ணிற்கு கோபிராஜன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சிவாஸ்ரீ தான் அனாதை என கூறியதை யடுத்து, கோபிராஜன் அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளார். இதை பயன்படுத்தி, தனக்கு பணம் நெருக்கடி இருப்பதாக சிவாஸ்ரீ கூறியுள்ளார். மேலும் அவர் உயிர் வாழ முடியாத அளவிற்கு பிரச்சனை என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி கோபிராஜன், சிவாஸ்ரீ கூறிய வங்கி கணக்கிற்கு கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ. 15 லட்சம் வரை பணத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே திருமணம் குறித்து பேசும் போதெல்லாம் சிவாஸ்ரீ தவிர்த்து வரவே, சந்தேகம் அடைந்த கோபிராஜன் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதை யடுத்து, சிவாஸ்ரீ கோபிராஜனின் தொலைபேசி எண்ணை தடை (பிளாக்) செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கோபிராஜன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆவடி இணைய வழி குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சிவாஸ்ரீ என்ற பெயரில் ஆவடி மோரை திருமலை நகரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் மனைவி புவனேஸ்வரி (42) என்பவர் திருமணமாகாத ஆண்களை குறி வைத்துதொலைபேசி மூலம் பேசி ஏமாற்றி பணம் பறித்ததும் தெரிய வந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த புவனேஸ்வரியை காவல் துறையினர் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
காலமானார்
அம்பத்தூர், பிப். 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதிக்குழு உறுப்பினர் திருமாறன் (63) வெள்ளியன்று காலமானார். மாணவர் பருவத்திலேயே இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு மங்களபுரம் பகுதியிலும், அம்பத்தூர்பகுதி முழுவதிலும் வாலிபர் சங்கம், கட்சியை கட்டுவதில் முன்னணியில் இருந்தவர். கட்சியின் மங்களபுரம் கிளை செயலாளராகவும், பகுதி குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். தேர்தல், மாநாடு பிரச்சார காலங்களில் “நரகத்தில் நாரதர்” நாடகத்தை உருவாக்கி கலை நிகழ்சிகள் மூலம் அம்பத்தூர் உள்ளிட்டு சென்னை நகரம் முழுவதும் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர். கட்சி நடத்தும் போராட்டம், ஆர்பாட்டம். மறியல் இயக்கங்களில் முன் நின்று பங்கேற்றவர். அவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 3 மணியள வில் நடைபெறவுள்ளது.
ஊதியபட்டியலை தயாரிக்க உதவும் மென்பொருள் அறிமுகம்
சென்னை,பிப்.9- ராம்கோ சிஸ்டம் நிறுவனம் ஊதிய பட்டியலை தயாரிக்க தனியார் மற்றும் அரசு நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும் ராம்கோ பேஸ் என்ற புதிய மென்பொருள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கிளவுட் அடிப்படையிலான, செயற்கை நுண்ணறியுடன் செயல்படும் இந்த இயங்குதளமானது, ஊழியர்களின் விடுமுறை,. மிகை நேர பணி, பணியாற்றிய நேரம், போனஸ். ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை நொடிப்பொழுதில் சேகரித்து தரும். இதனால் நிர்வாகத்தில் சம்பள பட்டியலை தயாரிக்க ஆகும் நேரம் குறையும். இந்த பட்டியலை ஊழியர்களும் நிர்வாகத்தினரும் எந்தநேரத்திலும் கணினி, டேப்லெட், மொபைல் போன் வாயிலாக காணமுடியும். இதுகுறித்து விளக்கிய ராம்கோ சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் சுப்பிரமணியன், தங்களது இயங்கு தளம் 3கோடியே 60லட்சம் சம்பள பட்டியலை தயாரிக்கும் திறன் கொண்டது என்றும் இது மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார். ராம்கோ சிஸ்டம்ஸ் 500க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது, அதில் 50 க்கும் மேற்பட்டவை உலகில் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றவை எனறு மற்றொரு நிர்வாகி யான ரோகித் மாத்துர் கூறினார்.
பாலாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் தகவல்
வேலூர்,பிப்.9- வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, காங்கேயநல்லூர் முதல் சத்துவாச்சாரி கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.90.66 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்த குமார், ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் மா.சுனில்குமார். நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் விவ சாயம் மற்றும் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வாக பாலாற்றில் சேண்பாக்கம், அரும்பருதி, காங்கேயநல்லூர், கழிஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது”என்றார். அமைச்சர் எ.வ.வேலு, “ திமுக ஆட்சியில் 1,281 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 275 தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 226 பாலங்கள் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்”என்றார். வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலைகள் மற்றும் சாலைகளை அகலப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வாட் வரி சமாதானத் திட்டத்தில் வணிகர்களை சேர்க்க கால அவகாசம் வணிகர் பேரமைப்பு கோரிக்கை
சென்னை, பிப். 8- வாட் சமாதானத் திட்டத்தில் விடுபட்ட வணிகர்களை சேர்க்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அக்டோபர் சட்டசபை கூட்டத்தில் 110 விதியின்கீழ் அறிவித்த வாட் வரி சமாதானத் திட்டம் அரசுக்கும் வணிகர்களுக்கும் உறவுகளை வலுப்படுத்தும் விதமாக உள்ளது. ஆனால், 50 ஆயிரத்திற்கும் குறைவான வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதுவரை சமாதானத் திட்டத்தில் ரூ 33 கோடி மட்டுமே அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. இன்னும் ரூ 24 ஆயிரத்து 200 கோடி நிலுவை உள்ளது. இந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்ய போதிய கால அவகாசமும், விழிப்புணர்வும் இன்னமும் வணிகர்களுக்கு தேவை என்பதையே இது பிரதிபலிக்கிறது. வாட் சமாதானத் திட்டத்தில் விடுபட்ட வணி கர்களை சேர்த்திட 1 ஆண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வணிகவரித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர், ஆணையர் ஆகி யோருக்கு பேரமைப்பின் சார்பில் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், வாட் சமாதானத் திட்டத்தில் 2021ஆம் ஆண்டுவரை வணிக வரி தணிக்கை செய்யப்பட்ட வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படாமல் இருக்கும் வணிகர்கள், இத்திட்டத்தால் பயன்பெற முடியாது என்பதால், அவர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியும் நிலுவைக்கு உள்ளாகிவிடும் என்பதை அரசும், வணிக வரித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, 2021ஆம் ஆண்டுவரை தணிக்கை செய்யப்படாத கணக்குகளை உடனடியாக தணிக்கை செய்து, அறிக்கை அளித்து விடுபட்ட அவர்களையும், இத்திட்டத்தில் உடனடியாக இணைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இந்த திட்டத்திற்கான கால அவகாசம் அவசியம் தேவை. இத்திட்டம் முழுமை அடைந்தால் மட்டுமே, அரசுக்கு வரி வருவாயும், அதிகாரிகளின் பணிச்சுமையும் வணி கர்களின் மனக்குறையும் ஒரு முடிவுக்கு வரும். எனவே, 15.2.2024 தேதியில் முடிவடையும் சமாதானத் திட்டத்தை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டித்து, அரசுக்கு வரி வருவாயையும், வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள், வரி நிலுவை செலுத்தி இயல்பாக வணிகத்தை தொடர உடனடி நடவடிக்கை எடுத்து உதவிடு மாறும், வணிகர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இதனால் அரசுக்கு கூடுதல் வரி வருவாய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதிவு மாவட்டங்கள் சீராய்வு கூட்டம்
திருவண்ணாமலை,பிப்.9- திருவண்ணாமலை மற்றும் செய்யார் பதிவு மாவட்டங்கள் பணி சீராய்வு கூட்டம் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை பதிவு மாவட்டத்திற்கு ரூ.270 கோடி இலக்கு நிர்ண யிக்கப்பட்டு அதில் ரூ. 155 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்க ளில் முழு இலக்கையும் அடைய வேண்டும் என்று இந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்யாறு பதிவு மாவட்டத்திற்கு என நிர்ணயிக்கப்பட்ட 185 கோடியில் ரூ. 95 கோடி இலக்கு ஈட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பதிவுத்துறை அலு வலகத்திற்கு வரும் பொது மக்களிடம் அலுவலர்கள் கனிவுடன், பணிவுடன் இன்முகத்துடன் நடந்துகொண்டு, பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு உரிய நேரத்தில் சேவை செய்து, அன்று மாலைக்குள் பொதுமக்களுக்கான ஆவ ணங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது.