சென்னை, நவ.13- விற்பனைக்கு பிந்தைய வாகனப் பாது காப்பு, பராமரிப்பு, சேவை, உதிரிபாகங்கள் மற்றும் பழுதுபார்ப்பு உபகரணங்கள் தொடர்பான இந்தியாவின் பிரமாண்ட மான ‘ஆட்டோசெர்வ் 2022’ கண்காட்சியை சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தியது. இதனை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சியில், சிஐஐ தென் மண்டல துணைத் தலைவர் மற்றும் வால்வோ குரூப் இந்தியா நிறு வனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனரு மான கமல் பாலி, சிஐஐ தமிழ்நாடு தலை வரும், டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிகிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியு மான சத்யகம் ஆர்யா, சிஐஐ தமிழ்நாடு மண்டல துணைத் தலைவரும், ஏபிடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனருமான சங்கர் வாணவராயர் மற்றும் காஸ்ட்ரோல் நிர்வாக இயக்குனர் சந்தீப் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கண்காட்சியில் இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.