கள்ளக்குறிச்சி, ஜன.8 - செம்பரம்பட்டு-பூட்டைஅம்பேத்கர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் கிளை துவக்க விழா செம்பராம்பட்டு கிராமத்தில் கிளை தலைவர் ஜி.செல்வம் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது, சங்க கொடியை மாவட்டத் தலைவர் பி.ஏழுமலை ஏற்றி வைத்தார். சங்கத்தின் பெயர் பலகையை அ.பண்டலம் ஒன்றிய கவுன்சிலர் ச.சசிகுமார் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் சிறப்புரை யாற்றினார் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.லோக நாதன், மாவட்டப் பொருளாளர் எ.ரமேஷ் , தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை,கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆர்.பச்சையப்பன்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் ஜி. செல்வம்,செயலாளர் ஆர். ஜெயபால்,பொருளாளர் கே. பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.