விழுப்புரம், மே 12- ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவனின் சாதி பெயரை சொல்லி திட்டிநெருப்பில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த சம்பத்தில் மூன்று மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே காட்டுச்சிவிரி அண்ணா நகரை சேர்ந்தவர் கன்னியப்பன் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த வர். இவரது மகன் சுந்தரராஜன் (11). அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும் சக மாண வர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தர ராஜனை பள்ளிக்கு போகும்போது சாதி பெயரை சொல்லி அவமான ப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாணவன் சுந்தரராஜன் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனே கன்னியப்பன், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறை யிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மாண வர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த 3 மாணவர்களும் இருளர் இன மாணவனிடம் தகராறு செய்து சாதிப்பெயரை கூறி அவமானப்படுத்தி யதுடன் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளிவிட்டு ஓடிவிட்ட னர். இந்த தவலை அறிந்த திண்டிவ னம் சாராட்சியர் அமித், அரசு மருத்து வமனைக்கு சென்று சுந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை காவல்நிலையத்திலும் புகார் செய்ய ப்பட்டது. இந்த நிலையில், சாதிய வன்மத்து டன் நடந்துக்கொண்ட 3 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.