districts

விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல்

ராணிப்பேட்டை, மே. 22 -

     தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி மீது தாக்குதல் நடத்தியவர்களை பார பட்மின்றி கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

   வாலாஜா ஊராட்சி ஒன்றியம், முகுந்த ராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலக குறிப்பேடுகள் தொடர்பாக சில ஆவ ணங்களை பார்வையிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பின ரும், விவசாய சங்க மாவட்டச் செயலாளரு மான எல்.சி. மணி தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் கீழ் மனு செய்திருந்தார்.

   இதனையடுத்து, பொது தகவல் அலுவலர், தலைமையிட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி கடிதத்தின் திங்களன்று (மே 22) ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆவ ணங்களை பார்வையிட சென்றார். ஆனால், அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

   பின்னர், அங்கிருந்து வீடு திரும்பும் போது  அக்கரவரம் பகுதியில் முகந்திராய புரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. முருகன் தூண்டுதலின் பெயரில் துணைத் தலைவர் சுரேஷ், ஐயப்பன், ராம்கி, மணி, தினேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் கொண்ட குண்டர்கள் மணியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது, அங்கிருந்த சிலர் அவரை மீட்டு வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பிறகு, இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். காசி நாதன், தாலுகா செயலாளர் ஆர். மணி கண்டன் ஆகியோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.  பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காசிநாதன், “ விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாரை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

   மருதம் பாக்கம் அ. ருத்ரமூர்த்தி, ஆட்டோ பாபு, லாலாபேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கோகுலன், கோடீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.