districts

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.98 கோடியில் புதிய மேம்பாலம் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை, ஏப். 7 - சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியத்தின் மீதான விவாதம் வியாழனன்று (ஏப்.7) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், புதிய  அறிவிப்புகளை வெளி யிட்டார். சென்னையில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்றவாறு, மண்டலங்கள் மறு சீரமைக்கப்பட்டு, புதிய  மண்டலங்கள் உருவாக்கப் படும். கோடம்பாக்கம், அடை யாறு மண்டலங்களில் 24 மணி நேர குடிநீர் விநி யோகம் செய்ய 1958 கோடி  ரூபாயில் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப் படும். அசோக் பில்லர் கழிவு  நீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் முதல் நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் வரையிலான அண்ணா பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் சேகரிப்பு அமைப்பு 32 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி யில் 30 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 20 தகன மேடைகள், எரிவாயு தகன மேடைகளாக மாற்றப்படும். 50 கோடி ரூபாய் செலவில் 150 திறந்த வெளி பூங்காக்கள் அமைக் கப்படும். பழுதடைந்த சாலை கள் 400 கோடி ரூபாய் செலவில் செப்பணிடப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்கு வரத்து பேருந்து நிலையமாக மாற்றி அமைக்கப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி களில் 75 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 100 குளங்களும், பேரூராட்சிகளில் 63.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 112 நீர்நிலைகளும் சீரமைக் கப்படும். 50 கோடி ரூபாய்  செலவில் 50 விளையாட்டு  திடல்கள் மேம்படுத்துவ தோடு, புதிய திடல்களும் உருவாக்கப்படும். மெரினா கடற்கரையில் உள்ளது போன்று பெசன்ட் நகர்  கடற்கரையிலும் கடலுக்கு  அருகில் மாற்றுத்திறனாளி கள் செல்வதற்கு ஏதுவாக  மர நடைபாதை அமைக்கப் படும்.

பாலங்கள்
கூவம் ஆற்றின் குறுக்கே  யூனியன் சாலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக் கும் வகையில் சின்ன நொளம்பூர், ஓம்சக்தி நகர்  ஆகிய இரண்டு இடங்க ளில் 120 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 2 மேம்பாலங் கள் கட்டப்படும். கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் உள்ள 2பி ரயில்வே சந்திக் கடவில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்படும். ஜீவன் நகரில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆஸ்பிரின் சாலையில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலங்கள் கட்டப்படும்.

பள்ளி
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், மேசை, நாற்காலிகள் வாங்க 60 கோடி ரூபாய்  செலவிடப்படும். சென்னை யில் 3 இடங்களில் நாய் இன கட்டுப்பாட்டு மையம், நாய்கள் இறந்தால் தகனம் செய்ய தகன மேடை ஆகியவை 20 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, மாங்காடு, திருவேற்காடு நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக் கடை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.