districts

img

ரஷ்ய கலாச்சார மையத்தில் பொன்விழா புகைப்படக் கண்காட்சி

சென்னை, டிச. 30- சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் 50ஆவது ஆண்டு விழா, பொன்விழா புகைப்பட கண்காட்சி வியாழனன்று (டிச. 29) தொடங்கியது. சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களும், நினை வுகளும், இயக்குநர்களின் புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண் காட்சி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் ெஜனடி ரோகலேவ் பேசுகையில், தென்னிந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மக்களுக்கு இடையே நட்பு மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதில் மற்றும் வளர்ப்பதில் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் முக்கிய பங்கு வகிக்கிறது.  மேலும் ஆரம்பம் முதல் இன்று வரை, இந்தியா விற்கும் ரஷ்ய கூட்டமைப் பிற்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் நட்பை வளர்த்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் தென்னிந் தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரக தூதர் ஓலெக் அவ்தீவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.