districts

img

சோளிங்கர் கோவிலில் செப்டம்பர் முதல் ரோப் கார் வசதி

ராணிப்பேட்டை, ஜூன் 25-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழி யர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றது.

   இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 2 ஆயிரத்து 79 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பேசினார்.  ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.