அண்ணாநகர், ஜூன் 2-
கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
லட்சக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்லும் கோயம்பேட்டில் மார்க்கெட்டில் 54 கழிப்பறைகள் செயல்பட்டு வந்தது. பெண்கள் கழிப்பறைகள் குறைவாக இருந்ததால் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, பெண் வியாபாரிகள், அங்காடி நிர்வாகத்திடம், பெண்களுக்கு தனி கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று அங்காடி நிர்வாக சார்பில் பெண்களுக்கு தனி கழிப்பறை கட்டும் பணி 4 பிரிவின் கீழ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு 46 கழிப்பறையும், ஆண்களுக்கு 54 கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்தில் முடியும் நிலையில் உள்ளது. பணிகள் முழுமையாக முடிந்தபிறகு பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.