districts

img

கடலூர் பள்ளி மாணவருக்கு விண் ஆய்வாளர் சான்று

கடலூர், அக்.26- கடலூர் வெள்ளி கடற்கரையில் உள்ள கடற்பாறைக்கு அருகே இருந்து விண்ணிலிருந்து விழுந்த எரிகற்கள் ஆய்வுசெய்து கடலூர் கிருஷ்ண சாமி நினைவு மெட்ரிக் மேல்நிலப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் அனேஷ்வர் நாசாவின் சர்வதேச விண் ஆய்வாளர் சான்று பெற்றுள்ளார். கடலூர் அண்ணா நகரில் வசிக்கும் மாணவர் அனேஷ்வர். கிருஷ்ண சாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரு கிறார். விண் ஆய்வில் சிறுவயதிலி ருந்தே ஆர்வம் கொண்டவர்.  பள்ளியில் நடைபெறும் அஸ்ட்ரா மிகல் கிளப் – போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். அவரது ஆர்வத்தை பார்த்து – கடலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவரது தந்தை வெங்கடேசன் மகனுக்கு தொலை நோக்கி விண் ஆய்வு உப கரணங்களை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார். மாணவர் அனேஷ்வர் கடலூர் வெள்ளி கடற்கரை (சில்வர் பீச்) பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு 56 எரிகற்களை தேடி எடுத்து சோதனை செய்து அவை விண்ணி லிருந்து விழுந்த எரிகற்கள் என்பதை நிரூபித்து அறிமுகம் செய்தார்.  சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் (IASC) மற்றும் ஹவாய் பான் ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்க நாசா (NASA) வுடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனேஷ்வரை இணைத்துக் கொண்டு அவருக்கு அங்கீகார பாராட்டு சான்றிதழ் வழங்கியது. சர்வதேச வான் ஆய்வு குழுமம்அ (International Astronomical Union) வரை உறுப்பினராக அங்கீகரித்தது.

மாணவர் அனேஷ்வர் கடலூரில் விழுந்த 56 எரிகற்க ளுடன் (Meteoroids) ஏழு விண்கற்களை யும் (சிறுகோள்கள்) கண்டு பிடித்து – ஹார்டின் – சிமன்ஸ் பல்கலைக் கழகத்தின் (டெக்சாஸ்) விண் ஆய்வாளர் சான்றிதழ் பெற்றுள்ளார்.  மாணவன் அனேஷ்வர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருமான ஆயிஷா நடராஜன் நேரில் அழைத்து பாராட்டினார்.  மேலும் மாணவனை சமூக அலுவலர்கள் பொதுமக்கள் விண் ஆய்வாளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாணவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வீடு முழுவதும் அலங்கரித்து வைத்துள்ளார். இதுகுறித்து மாணவர் அனேஷ்வர் கூறும்போது,“ யூடியூப்பில் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வு மையம் (TYSRO) எனும் மாண வர் அமைப்பை ஏற்படுத்தி சகமாண வர்களிடையே விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறேன்”என்றான். கடலூரிலிருந்து ராக்கெட் விட வேண்டும், சிறிய அளவிலான செயற்கைகோள் கண்டுபிடித்து அதை நாசாவிடம் கொடுத்து விண்ணில் செலுத்த வேண்டும் என்பது எனது ஆசை. இதற்கு கடுமையாக உழைத்து வருகிறேன் என்றும் அவர் கூறினார்.