குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 வழங்க வேண்டும், கோவிட் பெருந் தொற்று காலத்தில் மாதம் வழங்கிய ஆயிரம் ரூபாயை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சித்தரா தலைமையில் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் எம்.பார்வதி, மாவட்டப் பொருளாளர் விஜயா, சிபிஎம் நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, மாவட்ட துணை தலைவர்கள் எம்.வீரபத்திரன், பி.கணபதி, கமலக்கண்ணன், போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி கே.நாகராஜ், மகேஸ்வரி ஆகியோர் பேசினர்.