சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமியை தடுத்து நிறுத்தி கைது செய்து பட்டம் வாங்கவிடாமல் தடுத்து நிறுத்திய தஞ்சை காவல்துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி கிளைச் செயலாளர் அவினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சௌமியா உள்ளிட்ட பலர் பேசினர்.