இந்திய ராணுவத்தின் புதிய தலைமை பொறியாளராக லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைப் பொறியாளர் ஹர்பல் சிங் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்த இடத்திற்கு லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார். 1986-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அர்விந்த் வாலியா, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் என்பதுடன், அகடாமியின் மதிப்பிற்குரிய விருதான வெள்ளிப் பதக்கத்தை பெற்றவர் ஆவார். பாலைவன படைப்பிரிவு கமாண்டர் மற்றும் காஷ்மீர் பொறியாளர் படைப்பிரிவு கமாண்டர் உள்ளிட்டப் பல்வேறு பொறுப்புகளையும் அரவிந்த் வாலியா இதற்கு முன்பு வகித்துள்ளார்.