ஆருத்ரா நிதி நிறுவன மோசடி முக்கிய நிர்வாகி கைது
சென்னை. ஏப்.21- நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா செந்தாமரை கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆருத்ரா நிறுவனத்தில் ராஜா செந்தாமரை முக்கியமான முகவராக செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.600 கோடி வரையில் அவர் வசூலித்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கைதான அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சந்திர காந்தின் 3 கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் ஆருத்ரா நிறுவனத்தின் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆவின் பால்பண்னையில் பால்பாக்கெட் திருட்டு
சோழிங்கநல்லூர், ஏப்.21- சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் ஓட்டுநர் மற்றும் உதவி யாளர் ஒருவர் கூடுதலாக பால் பாக்கெட்டு களை ஏற்றிக்கொண்டு வெளியே அவற்றை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. வியாழக்கிழமை காலை ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 576 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் ஆவின் பால் நிறுவன பொது மேலாளர் சுஜாதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள் மீட்பு
போரூர், ஏப், 21- கோயம்பேடு காவல் நிலையம் அருகே வியாழன் இரவு 2 சிறுமிகள் வழித்தெரியாமல் சுற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் காவலர்கள் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும் அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருவதும் தெரியவந்தது. தாய்-தந்தையை இழந்த மாணவிகளை பெங்களுரில் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்த னர். மேலும் மாணவிகள் தாங்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று போலீசாரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து மாணவிகள் இருவருக்கும் காவல்துறையினர் அறிவுரை கூறி காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்கள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் விழுப்புரத்தில் மே1 நடைபெறுகிறது
விழுப்புரம், ஏப்.21- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்(நெகிழி) பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விழுப்புரம் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் 1-ந் தேதி நடக்க உள்ளதாக விழுப்புரம் ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுவழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், பொதுப்பிரிவினர், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோ மீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்படவுள்ளது. இப்போட்டி களில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000, 4 முதல் 10 இடம் வரை வருவோருக்கு தலா ரூ.500 பரிசளிக்கப்படும். மாரத்தான் போட்டிகள் மே மாதம் 1.5.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப் படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர். உள்விளையாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9566883394 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல் அறுவடை வாகனத்தை விபத்தின்றி ஓட்டிச்செல்க ராணிப்பேட்டைஆட்சியர் அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை,ஏப்.21- நெல் அறுவடை வாகனங்கள் சாலையில் ஓட்டிச்செல்லும் போது முன்புறம் உள்ள அறுவடை இயந்திரத்தால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் கவனமாக ஓட்டிச்செல்லவேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவுரை கூறியுள்ளார். அறுவடை முடிந்தபின் இயந்திர உருளையை பின்பக்கம்கழற்றி பொருத்திய பின்புதான் பொது சாலையில் ஓட்டிச்செல்ல வேண்டும். மேலும்,கலப்பை பொருத்திய டிராக்டர் வாகனத்தில் கலப்பை இடது, வலது புறங்களில் அசைந்துசெல்லாமல் மெதுவாக ஓட்டிச் செல்லவேண்டும். டிரெய்லர் வாகனத்தின் பின்புறம் கட்டாயம் சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டிய பின்பே இயக்கி செல்ல வேண்டும். பொதுச் சாலையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பின்புறம்,இடது, வலது புறங்களில் பொருட்கள் நீட்டிக் கொண்டும், மனித உயிருக்கு தீங்குநேரிடும் வகையி லும் ஓட்டிச் செல்லக்கூடாது. மேலும், சரக்கு வாகனங்களில் ஆட்களைஏற்றிச் செல்லக்கூடாது.மேற்கண்ட விதிமுறை களை தவறாமல் கடைபிடித்து, சாலையில் அனைவரும் பாதுகாப்புடன் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளைமீறுவோரின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய அபராதம் விதிக்கப்படும் எனமாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தெரிவித்துள்ளார்.
சாலைவிபத்தில் இருவர் மரணம்
கிருஷ்ணகிரி,ஏப் 21- ஓசூர் அருகே மத்திகிரி பகுதியைச் சேர்ந்த 24 வயது சபரி, கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திரா பகுதியை சேர்ந்த ஹர்ஷா, மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் நோபிக் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனங்களில் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளி யன்று பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்தனர்.ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளியில் பைக் சாக சத்தில் ஈடுபட்ட போது 2 இரு சக்கர வாகனங்க ளில் சாகசம் செய்தவர்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட னர். இந்த விபத்தில் சபரி மற்றும் ஹர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நோபிக் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ண கிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை
விழுப்புரம்,ஏப்.21- விழுப்புரம் நகராட்சியில் 30-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கப்படும் என நகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு கடந்த ஏப்.13ம் தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதி கள் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்பிரிவின்படி சொத்து உரிமையாளர்கள், தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 விழுக்காடு (அதிகபட் சம் ரூ.5 ஆயிரம்) ஊக்கத் தொகை பெற்று பயனடை யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டு க்கொண்டுள்ளது. சொத்துவரி செலுத்த ஏதுவாக https://tnurba nepay.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விழுப்புரம் நகராட்சியை தேர்வு செய்து சொத்து வரி தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யட் பட்டுள்ளது.