districts

img

மக்களை கனிவோடு அணுகுங்கள் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

தாம்பரம், மார்ச் 27 - பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்கு னர் (டிஜிபி) சைலேந்திரபாபு அறிவுறுத்தினார். தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் கானாத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவினரின் பணி நிலை மைகள் குறித்து கேட்டறிந்தார். புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து அறிவுறுத்தினார். குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் சிறப்பாக செயல்பட்டு தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டி னார். காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.