districts

img

காதல் மண தம்பதிகளுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி,பிப்.16 - காதலர் தினத்தை முன்னிட்டு அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற தலைப்பில் காதல் திருமணம் செய்தவர்க ளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆஸ்யா , முதல் காதல் , வசந்த கால வெள்ளம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் தமுஎகச மாவட்ட பொரு ளாளர் வேலா.கந்தசாமி தலைமையில்  நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - இந்திய மாணவர் சங்கம் இணைந்து சாதி,மதம், இனம், மொழி,கடந்து காதலைப் போற்றிடுவோம் என்ற முழக்கத்தோடு பிப்.14 ல் காதலர் தினத்தை கொண்டாடினர்.  கல்லை குறிஞ்சி கலைக்குழு வினரின் கலைநிகழ்ச்சி யோடு துவங்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட காதல்  மணம் செய்து கொண்ட வர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தாரே!என்ற தலைப்பில் தமுஎகச மாநில குழு உறுப்பினர் கவிஞர் பால்கி உரையாற்றினார். விழாவில் ஆஸ்யா என்ற நூலை மாணவர்சங்க மாவட்டச் செயலாளர் பி.சின்னராசு வெளியிட ஸ்ரீராம்-பவதாரணி தம்பதி பெற்றுக் கொண்டனர்.முதல் காதல் என்ற நூலை தமுஎகச மாவட்டத் தலை வர் கு.சுதா வெளியிட  திரு மால்,விசித்ரா தம்பதி பெற்றுக் கொண்டனர். வசந்தகால வெள்ளம் என்ற நூலை மாதர்சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தேவி வெளியிட மணி மாறன், ஐஸ்வர்யா தம்பதி பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வாலிபர்  சங்க மாவட்டச் செய லாளர் எம்.கே.பழனி,நகரச் செயலாளர் இ .சதீஷ்குமார், எம்.தீபன்ராஜ்,ஏ.ரிச்சட்  பிரபு, ஏ.ராமராஜன்,ஏ.கஸ்தூரி, க.குமரன்,சி.திருசங்கு, தா.மணிராஜ், ஏ.மு.இராதா(தமுஎகச), எ.சுலோச்சனா, ஆர்.பூங்கொடி, எஸ்.ஜெயந்தி, எஸ். பேபிலட்சுமி(மாதர் சங்கம்), ஜே.டார்வின்,ஆர்.ஜோதி நிர்மல் ராஜ்,கே.தருண்குமார்,எம்.பாலாஜி (மாணவர்சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.