districts

செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை,நவ.30- தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 2022-23 ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் 2022-23 ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பானஇரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில்,  சென்னை மாநகராட்சி யில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசு களுக்கும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்றவர்கள்  விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பயிற்சி (ANM COURSE) (12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) தமிழ்நாடு அரசு விதிகளின்படி, ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ), எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை,தண்டையார்பேட்டை,  சென்னை- 600 081ல் உள்ள தொற்று நோய் மருத்துவமனை அலுவலகத்தில் 5.12.2022 முதல் 11.12.2022 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.12.2022 மாலை 5 மணிக்குள் வந்துசேர வேண்டும். அதன் பின்னர் பெறப்படும்விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்படமாட்டாது.