districts

img

ஸ்ருதி மரண வழக்கில் மேல்முறையீடு மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தல்

சென்னை, பிப். 4 - சேலையூர் சீயோன் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி படித்து வந்தார். 2012 ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பள்ளி பேருந்து இருக்கையின் கீழ்ப்பகுதியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து, அதே பேருந்தின் சக்கரம் ஏறி பரிதாபமாக உயி ரிழந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ சேகரன், வாகன உரிமையாளர் யோகேஷ், ஓட்டுநர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக கூறி  கடந்த மாதம் 25ந் தேதி, குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி காயத்திரி விடுதலை செய்தார். எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. மாதர் சங்கத்தின் தாம்பரம் பகுதி ஏ.பிரேமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர் ஆர்.விஜயா, துணைச் செயலாளர் அணு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பாரதி ஆகியோர் பேசினர்.