மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை சார்பில் ஓட்டேரியில் மதவெறி எதிர்ப்பு கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் கே.எஸ். கார்த்தீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.வெற்றி ராஜன், துணை தலைவர் எம்.பி.முகமது நாசர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செலத் மேரி, ஜூகைப், மொய்தீன், ஆரிப் ஆகியோர் பேசினர்.