சென்னை, நவ.8- சென்னை இந்தியன் ஆயில் பவனில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி செவ்வாயன்று (நவ.8) நடைபெற்றது. இதில் ஆவடி காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ராத்தோர் பேசுகையில், “நேர்மை என்பது நமது பண்புநலனின் உள்ளார்ந்த ஒன்றாகும். சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சக குடி மக்களை மதித்து நடத்தல் என்பதே நம்முடைய பணியிலும் சொந்த வாழ்விலும் நம்மை வலிமையாக்கும்” என்றார். லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த தகவல்களைப் பரப்பும் வகையில், நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். முன்னதாக, தலைமை பொது மேலாளர் (விஜிலென்ஸ்) ஹைமா ராவ் வரவேற்றார். தலைமை பொது மேலாளர் கல்யாணி, தலைமை பொது மேலாளர் (மனித வளம்) - சிவன் ஆகியோர் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். சில்லறை விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை முறைகேடுகளை ஒழிக்க இந்த வாரத்தில், சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் திடீர் சோதனை நடத்தப்பட்டது.