சென்னை, ஜூன் 21 - இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (பெருங்குடி) 36வது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூன் 19) பெருங்குடியில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், ராணுவத்தில் ஒப்பந்த ராணுவ வீரர் முறையை கொண்டு வரும் ‘அக்னிபாத்’ திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவர் எஸ்.அப்பனு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சங்க கொடியை துணைத்தலை வர் எஸ். ஜெயபிரகாசன் ஏற்றினார். வி.ரவிச்சந்திரன் வரவேற்றார். துணைச்செயலாளர் வி.வேலவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன் முடி, செயலாளர் பா.பாலகிருஷ்ணன், ‘யுனைட்’ சங்க பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின், சங்கத்தின் செயலாளர் ம.விஜயகுமார், பொருளாளர் வா.செல்வம் உள்ளிட்டோர் பேசினர். தலைவராக எஸ்.அப்பனு, பொதுச் செயலாளராக ம.விஜயகுமார், பொருளாளராக சி.ஏகேகோபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.