districts

img

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சென்னை,ஜன.8-    முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு  ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டு ப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை  ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகின்றன.  ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்க ளில் பயணிக்க,  2 டோஸ் கொரோனா தடுப்பூசி  போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனு மதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  ருகூளு செயலி மூலம் முன் பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல்  தற்காலிக நிறுத்தம் என்றும்,  பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடை யாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாத ரயில் பயணி களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது . இந்த புதிய  கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரு கின்றன.

;