திருவண்ணாமலை,நவ. 17- பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும் என்று மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்ட பத்தாவது மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஹேமலதா மணி திருமண மண்டபத்தில், சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் ஞாயிறன்று (நவ.17) துவங்கியது. பொதுக்கூட்டம் மாவட்ட மாநாட்டை யொட்டி சனிக்கிழமை (நவ.16) திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசுகையில், அருணாச்சலா சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும் என்றார். வந்தவாசி அருகே அருங்குணம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டம் நடத்தியதை சுட்டிக் காட்டிய அவர், மாநிலம் முழுவதும் பஞ்சமி நிலங்களை பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சேத்துப்பட்டு பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி அளித்த காவல்துறை, திருவண்ணாமலையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு பேரணிக்கு அனுமதி கொடுக்காமல் தடை விதித்ததை கடுமையாக சாடினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் பேசும், இந்தியாவில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மேற்கு வங்காளத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப் பட்டது என்றார். தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கும் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருவதையும் சுட்டிக்காட்டினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களின் கோரிக்கை மனுக்களை வாங்க மறுக்கும் மாவட்ட ஆட்சியரின் வாழ்வாதாரம் மக்கள் வரிப்பணத்தில் தான் உள்ளது. மக்களுக்கான பணியை செய்யாத அவரை தமிழக அரசு பணி மாறுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் பேசினர். வேங்கிக்கால் கிளைச் செயலாளர் எஸ். ஆனந்தன் நன்றி கூறினார். வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை முயற்சியால் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்தில் பயனாளிகள் விளைவித்த முதல் சாகுபடி யான உளுந்து பயிரை, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், என்.பாண்டி ஆகியோரிடம் நினைவு குறியீடாக விவசாயிகள் ஒப்படைத்தனர்.
பிரதிநிதிகள் மாநாடு
திருவண்ணாமலையில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பிரகலநாதன் தலை மையில் வந்த கொடி பயணத்தின் கொடியை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. பாரி கொடுக்க கே.வாசுகி பெற்றுக் கொண்டார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.அப்பாசாமி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். செங்கத்தில் இருந்து ஏ. லட்சுமணன் தலைமையில் கொண்டு வந்த தியாகிகள் நினைவு ஜோதியை எம். வீரபத்திரன் கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சேகரன் பெற்றுக்கொண்டார். வரவேற்பு குழு தலை வர் எஸ்.அபிராமன் வர வேற்றார். பிரதிநிதிகள் மாநாட்டுக்கு எம்.வீரபத்தி ரன், அஞ்சலி, நவாப்ஜான் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், வரவு-செலவு அறிக்கையை எஸ். ராமதாஸ் ஆகியோர் சமர்ப்பித்தனர். முன்னதாக அரங்கின் வளாகத்தில் வைக்கப்பட்ட புகைப்படம் மற்றும் புத்தகக் கண்காட்சியை மாநில செயற்குழு உறுப்பி னர் கே. கனகராஜ் திறந்து வைத்தார்.