ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட நலவாரிய பரிந்துரைகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவள்ளூர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நித்யானந்தம், மாநிலக் குழு உறுப்பினர் மணிமேகலை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மா.பூபாலன், நடராசன், சீனிவாசன், ராபர்ட் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.