பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற குறவன் இனத்தை சேர்ந்த மாணவர்களை பாராட்டி நோட்டு புத்தகம், வழங்கும் நிகழ்வும் பாரதியார் பாரதிதாசன் கவிதைகள், சுராவின் தமிழ் அகராதி வழங்கும் நிகழ்வும் அரக்கோணம் அருகே பள்ளூர் கிராமத்தில் தமிழ் நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.மு.தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ.வி.சண்முகம், துணைத் தலைவர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு, வார்டு உறுப்பினர் ஆதிமூலம் மாநிலக்குழு உறுப்பினர் த. சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.