திருவள்ளூர், ஜூன் 7-
ஊத்துக்கோட்டை வட்டம், லட்சிவாக்கம் பட்டி யலின மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து நிலத்தை ஒப்படைவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கட்சியின் மாவட்டச் செயாலாளர் எஸ். கோபால் கொடுத்த மனு வின் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் என் 53 லட்சிவாக்கம் கிராமத்தில் சர்வே எண் 146/3-இல் 5 1/2 ஏக்கர் தோப்பு புறம்போக்கு நிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டு மனை கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தனர்.
கடந்த ஆறு மாதங்க ளாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த பின்னணியில், ஆட்சி யருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிறகு, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி (127 பயனாளிகள் வீட்டு மனை கேட்டு விண்ணப் பித்த நிலையில்) 43 பய னாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆட்சி யரின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டும் தெரி வித்தது.
இந்த நிலையில், பட்டா வழங்கி இரண்டு மாதங்களை கடந்தும் இடத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. எனவே, தாங்கள் தலையிட்டு இடத்தை அளவீடு செய்து தலித் பயனாளிகளுக்கு வீட்டுமனையை ஒப்படைக்க வேண்டி ஏப்ரல் 11 அன்று தங்களிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.
இதனையடுத்து, மே 31 அன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் லட்சிவாக்கம் கிராமத்தில் இடத்தை அளவீடு செய்தனர். அப்போது, இது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் அள வீடு செய்யக்கூடாது என்றும் தலித் மக்களுக்கு நிலத்தை வழங்கக்கூடாது என்றும் ஆதிக்க சக்தியினர் தகராறு செய்தனர்.
நாங்கள் கொடுத்த பட்டாவை முடிந்தால் உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்து உத்தரவு கொண்டு வாருங்கள் அன்றைக்கு தோப்பாக பயன்படுத்த அனுமதிக்கிறோம் என்று வட்டாட்சியர் கூறினார். இது ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆதிக்க சக்திகளின் ஒரு சாராருக்கு ஆதரவான நிலைபாடாக உள்ளது.
ஏற்கனவே ஆர்.கே.பேட்டை வட்டம், ராஜா நகரத்தில் தலித் பய னாளிகள் 107 குடும்பங்க ளுக்கு 1997 -இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய தொடர் போராட்டங்களை தொட ர்ந்து பட்டா வழங்கப்பட்டது. இதனை பொறுக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதன் பிறகு, ஒராண்டாகியும் நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை. காரணம், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதென்றும் தடையானை உள்ளது
என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பிறகு, அந்த நிலத்தை அளவீடு செய்யாமல் 25 ஆண்டுகளாக காலதாமதம் செய்து வந்தனர். தலித் ஆணையம் , மனித உரிமை ஆணையம் தலை யீடு செய்து தலித் பயனாளி களுக்கு உடனடியாக நிலத்தை ஒப்படைவு செய்ய வேண்டும் என்றும் தாமதத்திற்கு காரண மான அதிகாரிகள் ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டது.
இந்த பிரச்சனைகளை சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினையாக மட்டுமே மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு தாமதம் செய்வதால் ஆதிக்க சக்தியினர் நீதி மன்றம் செல்வதும் அதி காரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதும் தடை யானை பெறுவதும் போன்ற செயல்களில் ஈடு படுகின்றனர்.
தற்போது ஊத்துக் கோட்டை வட்டத்தில் நடந்து நடைபெற்றும் ஜமா பந்திக்கு மாவட்ட ஆட்சி யரே அதிகாரியாக உள்ள தால், லட்சிவாக்கம் கிராமத்தில் தலித் பய னாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து உடனடியாக பய னாளிகளிடத்தில் நிலத்தை ஒப்படை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.