கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு, தரமான வேட்டி, சேலை மற்றும் ஊக்கத்தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும், கட்டுமான நல வாரியத்தில் பணப்பயன் சலுகைகள் வழங்குவது போல் மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நலவாரிய பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், கள்ளக்குறிச்சி, ஓசூர் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.