புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் மின் ஊழியர்களுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் சிவராஜ், காங்கேயன், பாலாஜி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.