districts

img

சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் கிடைக்க வேண்டும்

சிதம்பரம், ஏப். 17- அரசு மருத்துவமனை களில் அனைத்து மருந்து களும் நோயாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  மாநில செயற்குழு உறுப்பி னர் மேரி சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உலக சுகா தார தினத்தையொட்டி மாதர் சங்கம் சார்பில் தமிழ் நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் 9 அரசு  மருத்துவமனை, 64 சுகாதார  நிலையம், 319 சுகாதார உதவி மையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலை யங்கள் 24 மணி நேரமும் செயல்படவும், கூடுதல் கழி வறைகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை மேம் படுத்தவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 108 அவசர ஊர்தி இருக்க வேண்டும். ரத்த வங்கி, ஆக் சிஜன் அனைத்து மருத்து வமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்”என்றார். 15 வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த  தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நாய்க்கடி, பாம்பு கடி போன்ற விஷக்கடி மருந்து கள் அனைத்து மருத்துவ மனைகளிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும்.  சில அரசு மருத்துவ மனைகளில் சில மருந்து களை வெளியில் வாங்க மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். நோயா ளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் அனைத்தும் அரசு மருத்துவமனை யிலேயே வழங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்க ளில் மருத்துவர்கள் மருத் துவமனையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இச்சந்திப்பின் போது கடலூர் மாவட்டச் செயலா ளர் மாதவி, மாவட்டத் தலை வர் மல்லிகா, மாவட்ட துணைத் தலைவர் தேன் மொழி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசித்ரா, நகர  தலைவர் அமுதா, மாவட்டக்  குழு உறுப்பினர் சாந்த குமாரி ஆகியோர் உடனி ருந்தனர்.