அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை மாவட்ட 10வது மாநாட்டு வியாழனன்று (டிச.1) பாரிமுனையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், வழக்கறிஞர் செல்வராஜ் தங்கவேல் எழுதிய ‘வித்அவுட் பியர் ஆர் பேவர்’ எனும் நூலை மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் வெளியிட சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கோதண்டம் பெற்றுக் கொண்டார். சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் கே.இளங்கோ, மாவட்டத் தலைவர் கே.சுப்புராம், செயலாளர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.