இருசக்கர வாகனம், டாக்சியை தடை செய்யக் கோரி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் திங்களன்று (ஏப். 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் முருகேஷ், செயலாளர் உதயகுமார், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் உமாபதி, வடசென்னை ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஜெயகோபால், சம்பத், மாரியப்பன் (ஏஐடியுசி), ரமேஷ் (எச்.எம்.எஸ்), சாமுவேல் (எஸ்டிடியு), ஜாகிர் உசேன் (யுகேடி), வெற்றிவேல் (யுடிஎஸ்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.