கள்ளக்குறிச்சி, மே 7- கள்ளக்குறிச்சி மாவட்டம், நீல மங்களம் ஏ.கே.டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனைப்படைத்துள்ளனர். மாணவன் அவினாஷ் 600க்கு 587 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்-98, ஆங்கிலம்-96,கணிதம்- 98,இயற்பியல்-99, வேதியி யல்-98, உயிரியல்-98 என மொத்தம் 587 மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளியில் 2ம் இடம் பெற்ற மாணவி பாரதி 586 மதிப்பெண் பெற்றுள்ளார். பாடவாரியாக தமிழ்-99, ஆங்கிலம்-96,கணிதம்-100, இயற்பி யல்-95,வேதியியல்-96, கணினி அறிவி யல்-100 என மொத்தம் 586 மதிப்பெண் பெற்றுள்ளார்.பள்ளி அளவில் 3ம் இடம் பிடித்த மாணவி ஜெயபிரியா தமிழ்-96, ஆங்கிலம்-89, பொருளியல்-100, வணிக வியல்-100,கணக்கு பதிவியல்-100, கணினி பயன்பாடுகள்- 100 என மொத்தம் 585 மதிப்பெண் பெற்றுள்ளார்.இப்பள்ளி மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் 26 பாடங்களில் சதம் எடுத்து சாதனைப்படுத்துள்ளனர்.மேலும் தமிழ் பாடத்தில் 38 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியளவில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் வெங்கட் ரமணன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.