தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதி யில் மாதவராவ் என்பவருக்குச் சொந்த மான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், குட்கா ஊழல் தொடர் பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை யை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையா ளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டி யன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக் குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கில் சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த னர். அதில் கைது செய்யப்பட்ட மாதவ ராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர் களும் இடம்பெறவில்லை.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய , மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதி ராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதி மன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் குட்கா வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது சிபிஐ விசா ரணை நடத்தலாம் என ஒன்றிய அரசும் விசாரணைக்கு அனுமதி அளித்தி ருந்தது.
அந்தக் கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சி கள் குறித்த விவரங்கள் மற்றும் அவர் களின் வாக்குமூலம் தொடர்பான விப ரங்களை இணைத்தும், குற்றம்சாட் டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும் முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் குற்றப் பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசா ரணை திங்கள்கிழமை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி, ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சிபிஐ தரப்பில், குட்கா முறை கேடு தொடர்பான வழக்கில், விசாரணை நடத்துவது தொடர்பான ஒன்றிய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்காததால் இந்த வழக்கு 11 ஆவது முறையாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. முறைகேட்டில் சிக்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டு வரு கின்றது என்று அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.