கள்ளக்குறிச்சி, மார்ச் 11 - கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது, சின்ன சேலம் ஒன்றியம் கணியாமூர் ராயர் பாளையம் கிராமத்தில் வீடு கட்டி குடி யிருக்கும் விவசாய தொழிலாளி கள் பலமுறை மனு கொடுத்தும் பட்டா கொடுக்காமல் அலட்சியப் படுத்தும் வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. உடனடியாக இலவச மனை பட்டா வழங்கிடவும் கனியாமூர் கிராம எல்லையில் புஞ்சை தரிசு நிலத் தில் வீடு கட்டி குடியிருப் போருக்கும் ராயர் பாளையம் கிராமத்தில் புன்செய் தரிசு நிலத்தில் வீடு கட்டி குடியிருப் போருக்கும் பட்டா வழங்கக்கோரி 2014ல் மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை மனு கொடுக்கப் பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 35 நபர்களுக்கு வழங்கப்பட்ட தோராய பட்டாவை கிராம கணக்கில் ஏற்றாததால் அரசு நலத்திட்டங்கள் பெற முடி யாத நிலையிலும் மின் இணைப்பு பெற முடியாத நிலை உள்ளது எனவே இங்கு குடியிருக்கும் நபர்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தலைமை வட்ட நிர்வாகி பி.பழனி தலைமையில் மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாவட்ட செயலாளர் பி.சுப்பிர மணியன், மாவட்ட தலைவர் அ.பா.பெரியசாமி. சிபிஐஎம் வட்டச் செயலாளர் டி.மாரிமுத்து, மாவட்டக் குழு கே.மூக்கன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.