நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் நிலுவையில் உள்ளதால் விவசாய தொழிலாளர்கள் தங்கள் கைகளில் பணமில்லாமல் கருப்பு தீபாவளியாக மாறிவிட்டது. ஆகவே ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிறு, தடபெரும்பாக்கம், முஸ்லிம் நகர், பண்பாக்கம், பெரியபாளையம், சின்னம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ. தவமணி, மாவட்ட செயலாளர் அ. து. கோதண்டன், பொருளாளர் என். கங்காதரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.