விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, ஆகியோர் உடனிருந்தனர்.