அம்பத்தூர்,ஜன.28- மீட்கும் பணியில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை மஞ்சங் குப்பம் பகுதியில் வில்லி வாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புடைய 8 ஆயிரம் சதுர அடி இடம் கடந்த 30 வருடங்க ளுக்கு முன்பு லட்சுமணன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. சில வருடங்கள் மட்டுமே வாடகை செலுத்திய லட்சுமணனுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த உத்தர விட்டது எனவும் மீதமுள்ள நிலங்கள் 2 வாரங்களுக்குள் மீட்கப்பட்டு அற நிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.