districts

டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து நான்கு கட்ட போராட்டம்: வணிகர் பேரமைப்பு

சென்னை, ஜன. 3- டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து 4 கட்ட போராட்டம் நடத்த உள்ள தாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது வணிக வரித்துறை மேற்கொண்டு வரும் டெஸ்ட் பர்ச்சேஸ்  சோதனை கொள்முதல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவுப் பாதுகாப்புத்துறை சட்டங்கள் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டி ஒன்றிய, மாநில அரசு களின் கவனத்தை ஈர்த்திட 4 கட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.   முதல் கட்டமாக வரும் 10ஆம் தேதி அனைத்து வணிகர்களும் தங்கள் கடை முன்பு விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்றும், வணிகர்கள் விழிப்புணர்வு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை நடத்த உள்ளோம். 2ஆம் கட்டமாக வரும் 24ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தையும், 3ஆம் கட்ட மாக உண்ணாவிரதம் , 4ஆம் கட்ட மாக கடையடைப்பு  நடத்த உள்ளோம். உண்ணாவிரதம் மற்றும் கடை யடைப்புக்கான போராட்டத் தேதிகள் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.