விழுப்புரம், நவ. 25- நவமால் மருதூர் கிராம சாலைகளை சீரமைக்கக் கோரி நடத்துவதாக இருந்த நாற்று நடும் போராட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட நவமால் மருதூர் ஊராட்சியிலுள்ள சாலைகள் பெரும்பகுதி சேரும் சகதியுமாக மாறி விட்டன. இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று (நவ. 25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி அலுவலகம் முன்பு ஒன்றியக் குழு உறுப்பினர் சி.சந்திரசேகர் தலைமையில் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர், விழுப்புரம் வட்டாட்சி யர் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கடிதமும் எழுதி கொடுத்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.