districts

img

மக்களிடம் செல்வோம் பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம்

சென்னை, மார்ச் 25- மக்களிடம் செல்வோம் பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம் என இந்திய  வங்கி ஊழியர் சம்மேளன அகில இந்திய மாநாட்டு வர வேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் தலைவர்கள் தெரிவித்தனர். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய 11ஆவது மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை நடைபெறு கிறது. அதற்கான வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் சென்னையில் வெள்ளி யன்று (மார்ச் 24) நடை பெற்றது. இதில் நாடு முழு வதிலும் இருந்து 450 பிரதி நிதிகள் கலந்து கொள்கின்ற னர். வரவேற்புக் குழுத்  தலைவராக சிஐடியு  மூத்த  தலைவர்  டி.கே.ரங்கராஜன், செயலாளராக சம்மேளனத் தின் மாநில பொதுச் செய லாளர் டி.ரவிக்குமார், பொரு ளாளராக ராஜாகேசி உள்ளிட்ட 150 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாநிலத் தலைவர் எஸ்.சுனில்குமார் தலைமை தாங்கினார்.

இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் தேபாஷிஸ் பாசு சவுத்ரி, அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், தமிழ்நாடு பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார், தயானந்தம் (போக்குவரத்து), வில்சன் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்), ரமேஷ் சுந்தர் (மருந்து விற்பனை பிரதி நிதிகள்), ஸ்ரீதர் சுப்பிர மணியம் (பிஎஸ்என்எல்), ரமேஷ்குமார் (இன்சூ ரன்ஸ்), சைதை ஜெ (தமுஎகச), சந்திரன் (விவ சாயிகள் சங்கம்) ஆகி யோர் பேசினர். சுப்பிரமணி நன்றி கூறினார். பொதுத்துறை வங்கி களை தனியாரிடம் ஒப்படை க்கும் வகையில் காலிப் பணி யிடங்களை நிரப்பாமல் வாடி க்கையாளர்களுக்கு முழு சேவையை வழங்க முடி யாத நிலையை ஒன்றிய அரசு திட்டமிட்டு உருவாக்கி வரு கிறது. மேலும் அவுட் சோர்சிங் விடப்படுவதால், ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்வ தால் வாடிக்கையாளர் களுக்கு முழு சேவை கிடை க்காது.  வேலையில்லாத் திண்டாத்தையும், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணி யிடங்களை நிரப்பாமல் உள்ளதையும், தனியார் மய மாக்கினால் சமூக நீதி பறிக் கப்படும் என்பதையும் இணைத்து மக்களிடம் பிரச் சாரம் செய்ய வேண்டும். இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய அரசு செயல்படும்போது பொதுத் துறை வங்கிகளை தனி யாரிடம் ஒப்படைக்கும் நட வடிக்கையையோ அல்லது பங்குகளை விற்கும் நட வடிக்கையையோ மேற் கொள்ளப்படவில்லை. தற்போது வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாப்பதோடு, தேசத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாது காக்கும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமானால் வாடி க்கையாளர்களின் பணத் திற்கு பாதுகாப்பு இல்லை.  கிராமிய வங்கிகளை மூடினால் கிராமப்புற மக்க ளின் சேவை பாதிக்கப்படும். இதுகுறித்து ஊழியர்களின் குடும்பத்தினரிடம், வாடிக் கையாளர்களிடம், பொது மக்களிடம் பேச வேண்டும். இவற்றை நாடக வடிவில், பாடல் வடிவில், குறும்படம், சமூக வலைதளம் என அனைத்து வகையிலும் பிரச்சாரங்களை மேற் கொள்ள வேண்டும். பொது மக்களின் ஆதரவோடு ஒன்றிய அரசின் தனி யார்மயக் கொள்கைகளை முறியடிப்போம். வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப் போம் என்று தலைவர்கள் பேசினர்.