சென்னை, டிச. 16 - உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு கூடுதல் தனி அறைகளை (சேம்பர்ஸ்) ஒதுக்க வேண்டு மென்று கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட பெண் வழக் கறிஞர்கள் சிறப்பு மாநாடு வியாழனன்று (டிச.16) உயர்நீதிமன்றம் எதிரில் நடைபெற்றது. மாநாட்டில், நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், உயர் நீதி மன்றத்தில் இருப்பது போல் பிற நீதிமன்ற வளாகங்களிலும் குழந்தை காப்பகங்கள் அமைக்க வேண்டும், பெண் வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய மானியத்துடன் அரசு வங்கிகள் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மகப்பேறு கால நல உதவிகள் கிடைக்க பார் கவுன்சில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.தாரா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பா.ஹேமாவதி வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத் தலைவர் ஜி.சம்கிராஜ் பேசி னார். வழக்கறிஞர் அ.அருள்மொழி சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பா.சீனிவாசன் நிறைவுரையாற்றினார். யு.அனுநிதா நன்றி கூறினார். மாநாட்டில் 17 பேர் கொண்ட உபகுழு வின் ஒருங்கிணைப்பாளராக சமந்தாவும், துணை ஒருங்கிணைப்பாளராக டி.ஆர்.தாரா, கே.காஞ்சனா, பா.ஹேமாவதி, ஏ.காரல் மொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.