புதுச்சேரி,ஜூன் 25-
வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுயமாக சிந்தித்து முடி வெடுக்கிற தெளிவுடையவர்களாக வர வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினைக் கிராமத்தில் தனி யார் இயக்கம் ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழா வில் இயக்கத்தின் இயக்குநர் ராம சாமி வரவேற்றார். நாடக மற்றும் திரைக்கலை ஞர் மு.ராமசாமி முன்னிலை வகித்தார்.
வாழ்த்துரை வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர்,“பெற்றோர் தங்கள் குழந்தைகளை நவீன நாடகங்களில் ஈடுபடுத்த வேண்டும். உங்களை (மக்களை) சிந்திக்க வைப்பது தான் நவீன நாடகங்களின் சிறப்பு”என்றார்.
ஒரு குழந்தை பரத நாட்டியத்தை கற்றுக் கொள்வதைவிட அதனுடைய சரித்திரத்தை கற்றுக் கொள்ளும் போது தான் பலமான ஆளுமையாக வர முடி யும். பழக்கப்படுத்துதல் அனைத்தும் வந்து விடும். ஆனால் வரலாற்றையும், உணர்வு களையும், நம்மை சுற்றி நடக்கின்ற விஷ யங்களையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுய மாக சிந்தித்து முடிவெடுக்கிற தெளிவுடைய வர்களாக வர வேண்டும்என்பது தான் பெற்றோரின் கனவாக இருக்க வேண்டும்.
ஒரு கலையின் உடைய உருவம் உரு வாவதற்கு, அது வடிவம் பெற்று முழுமை பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் கடந்து வரவேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நவீனயுகத்தில் அடுத்த சந்ததி யினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய ஒரு கலை இந்த நவீன நாடகங்கள்தான். இன்றைக்கு குழந்தைகளுக்கு கவனச் சிதறல்கள் அதிக அளவு இருக்கின்றன. கவனக்குவியல்களை பெற நவீன நாடகங்கள் முக்கியம்.
இன்றுள்ள குழந்தைகளுக்கு தொடர்பு திறன் மிக அவசியம். இது போன்ற திறன்களை உறுதியாக சொல்லும் பயிற்சி இந்த நவீன நாடகங்கள் மூலமாகத்தான் கிடைக்கும். புதுச்சேரியில் மிகச்சிறந்த நாடகப்பள்ளி இருக்கிறது. தமிழகத்தில் கூட இதுபோன்ற நாடகப் பள்ளிகள் இல்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் அதில் நிறைய பேர் படித்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.