districts

60ஆயிரம் ஊழியர்கள் தங்க விடுதி: ஃபாக்ஸ்கான் நிறுவனம் கட்டுகிறது

சென்னை,டிச.17- ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே 60ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகையில் வீடுகள், விடுதிகளை கட்டி வருகிறது.   ஆலையில் உற்பத்தி தடைபடாமல் நடக்க தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியிருந்தது.  இதனை ஏற்று  சென்னை அருகே 20 ஏக்கர் பரப்பில் இதன் கட்டுமானம் நடை பெறுகிறது. தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான், ஒப்பந்த அடிப்படையில் ஐபோன் 14 மாடல் உள்பட பல்வேறு மாடல் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது 15,000 பேரை திருபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் பணிக்கு அமர்த்தி உள்ள பாக்ஸ்கான் மேலும் 55,000 பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளது. தொழி லாளர்கள் விடுதிகள் கட்டுவதுடன் ஐபோன் தயாரிப்பு ஆலையின் விரிவாக்க பணியை ஃபாக்ஸ்கான் மேற்கொண்டுள்ளது. புதிய தொழிலாளர் விடுதியில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் நிறுவனங்கள் ஐபோன் தொழிற்சாலைகளை அமைத்து வருவதால் தமிழ்நாடு ஐபோன் தயாரிப்பு மையமாக உருவாகி வருகிறது.