சூளகிரி,செப்.4- தேன்கனிக்கோட்டை, சூளகிரி, வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம்,பகுதிகளில் கேரட் பீட்ரூட் முள்ளங்கி தக்காளி,கத்திரி அவரைக்காய் அமோக விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்கறி விளைச்சலில் இரண்டாம் இடத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள் விற்பனைக்கு வரும் போது மற்ற காய்கறிகளின் விலை திடீர் ஏற்றம் இறக்கம் ஏற்படும் நிலையில் அவரைக்காய் ஒரே மாதிரியான நிரந்தர நிலையில் நட்டம் ஏற்படாமல் விற்று வருகிறது.இதனால் தற்போது இப்பகுதி விவசாயிகள் நாட்டு அவரைக்காய்,சிவப்பு நெட்டை மூக்குத்தி கோழி அவரைக்காய் பயிர்களை அதிக அளவு பயிர் இடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.